Close
ஜூன் 3, 2026 11:31 மணி

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற 03.06.2026 முதல் 05.06.2026 வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆடவர் மற்றும் மகளிர் போட்டியாளர்களுக்கு மாநில அளவிலான கைப்பந்து, கால்பந்து, பால் பேட்மிட்டன், சதுரங்க விளையாட்டு, கேரம், தடகளப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் 436 ஆடவர்களும், 262 மகளிர்களும் பங்கேற்கவுள்ளனர். மேற்படி இப்போட்டிகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் போட்டியாளர்கள் தங்கும் அறைகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்டவற்றை முறையாக ஏற்படுத்திட வேண்டும். இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். போட்டிகள் நடைபெறும் இடத்தில் மருத்துவ குழுவுடன் அவசர சிகிச்சை வாகனம், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் காவல்துறை சார்பாக போட்டியாளர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் விளையாட்டு அரங்கத்தில் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்  அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி முதல்வர் (மு.கூ.பொ) தனக்கீர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், மண்டல முதுநிலை மேலாளர் சாந்தி, மாவட்ட இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top