Close
ஜூன் 3, 2026 11:31 மணி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் திறப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் திறப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்ததாவது: கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 4ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் பள்ளிகளை தூய்மை படுத்த வேண்டும் என்றும், குடிநீர் வசதி, மின்சார வசதி, ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்.

மேல்நிலைநீர்த்தொட்டிகளை தூய்மைப்படுத்திடவேண்டும், கடைசியாக தூய்மைப்படுத்தப்பட்ட நாள் மற்றும் தூய்மை படுத்த வேண்டிய நாட்களை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளி வளாக கட்டடங்களையும் , வகுப்பறைகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். சமையலறையும், சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பாத்திரங்களையும் சுகாதாரமாக வைத்திருக்கவேண்டும்.

கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும், மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்துறையுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் மரு.ஆர்.மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், செயற்பொறியாளர் (வளர்ச்சி) இளங்கோ, வட்டார கல்வி அலுவலர்கள், பேருராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top