திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய்யை கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற பேரவை கூட்ட தொடர் முடிவுற்ற நிலையில் இறுதி நாள் அன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் பேசியபோது, கடந்த காலங்களில் மிசா நிகழ்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதை கண்டித்து தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதில் கடந்த காலங்களில் குறிப்பாக மிசா காலங்களில் திமுக எவ்வாறு செயல்பட்டது என்பதை அறியாத வண்ணம் உள்ள முதல்வரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சினிமா ஷூட்டிங் போல் சட்டசபையில் நடத்தும் முதல்வருக்கு கடந்த கால வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது




