Close
செப்டம்பர் 12, 2026 3:18 மணி

கால நிலைக்கு ஏற்றவாறு வழக்குகளை சமரசம் செய்து கொள்ள முன்வர வேண்டும்: முதன்மை மாவட்ட நீதிபதி நாகராஜன்

காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டில் மூன்றாவது நிகழ்வாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி நாகராஜன் தலைமை வைத்து நிகழ்வினை துவக்கி வைத்தார்.

இதில் பேசிய முதன்மை மாவட்ட நீதிபதி நாகராஜன், வழக்கு தொடுப்பவர்கள் நீயா நானா என்பதில் ஈகோ பார்க்காமல் சமரசத்தில் ஈடுபட வேண்டும் எனவும், இது போன்ற நிகழ்வின் மூலம் நீதிமன்றங்களில் வழக்குகளின் தேக்கம் வெகுவாக குறையும் என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் முதலாவது வழக்கில் காரப்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்பவர் கடந்த 2024 மேற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 1.25 கோடி இழப்பீடு தொகையினை மாவட்ட நீதிபதி நாகராஜன் வழங்கினார்.

இந்நிகழ்வில் , கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன குமாரி மாவட்ட நீதிபதி பாண்டியராஜ் தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா சட்டப்பணி குழு செயலாளர் திருமால் முதன்மை சார்பு நீதிபதி மோகனா உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் காப்பீட்டு நிறுவன நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top