மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவினை, முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பூ கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையிலிருந்து வந்த கோவில் பணியாளர்கள் சதீஷ் சந்திர சேகர், ரமேஷ் ஆகிய ஊழியர்களின் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 5 அரை டன் பூக்களை நாட்களாக கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், கட்டப்பட்ட மாலைகள் 5 கோபுரங்களிலும் மாலைகளாக தொங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வெள்ளை நிற சாமாந்தி பூக்கள் மாலைகளாக கட்டப்பட்டு வருகிறது.
மேலும் மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் தேன் சாமந்தி பூக்கள் , சிவப்பு நிற விருச்சி பூக்கள்,ஐஸ்வர்யா பூக்கள் என 7 வகை பூக்கள் 5. 5.டன் அளவில் மாலைகளாக கட்டப்படுகிறது,
சாமந்தி பூக்கள் உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஓசூர் வேளாண்மை கல்லூரி பெங்களுரு பகுதிகளில் பயிரிடப்பட்டு பின்னர் திருப்பணிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை , சென்னை , திண்டுக்கல் , திருச்சி உள்ளிட்ட பகுதியிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து கடந்த மூன்று தினங்களாக மலர்கள் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




