Close
ஜூலை 23, 2026 11:42 காலை

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சுதந்திர தின விழா

சென்னை

சுதந்திர தின விழாவினையொட்டி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய துறைமுகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால்.

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற சுனில் பாலிவால், பின்னர் சுய மகளிர் சுய உதவி குழுவினர், அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுக பொது மேலாளர்கள் சஞ்சய் குமார், குணசேகரன், துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top