Close
செப்டம்பர் 20, 2024 6:31 காலை

குஜராத் அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

குஜராத் பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.

கோரிக்கைளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, மாநிலக்குழு உறுப்பினர் டி.சலோமி, மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகைராணி உள்ளிட்டோர் பேசினர்.

பில்கிஸ் வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்த குஜராத் பாஜக அரசை கண்டித்தும்,  பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top