Close
செப்டம்பர் 20, 2024 7:24 காலை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: நீதிமன்றத்தில் 6 பேர் சாட்சியம் அளிப்பு

விழுப்புரம்

விழுப்புரம் நீதிமன்ற வளாக முகப்பு தோற்றம்(பைல் படம்)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாக தொடரப்பட்ட வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் சாட்சியம் அளித்தனா்.

விழுப்புரத்தில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து,  இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி புஷ்பராணி முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிபாளர் கண்ணன் மட்டும் நேரில் ஆஜரானார்.  குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை.  அப்போது அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளான  உதவி ஆய்வாளர்  மணிகண்டன், போலீஸ்காரர்கள் வினோத்குமார், சதீஷ், தடய அறிவியல் துறை விஜய், மாலா, விக்னேஷ் ஆகிய 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 13-ஆம் தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top