Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக கலந்தாய்வுக்கூட்டம்

புதுக்கோட்டைபுஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக 19.9.2022   கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது.

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி  ஏவி ஹாலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கல்லூரியின் செயலர் எம். ராஜாராம்,  கல்லூரி முதல்வர் வி. செல்லமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.

உதவிப் பேராசிரியர் எஸ்.வினோத்குமார் வரவேற்புரை யாற்றினார்.   கல்லூரியின் துணை முதல்வர் வி.சாந்தி  வேளாண் படிப்பின் முக்கியத்துவத் தையும், பாடத்தைப் பற்றியும் ஒவ்வொரு பருவமும் நடக்கும் தேர்வுகள் பற்றிய விளக்கங்களை    பெற்றோர் மாணவர் களிடையே  எடுத்துரைத்தார்.

புதுக்கோட்டை
புஷ்கரம் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்

பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சியை முதலாம் ஆண்டு ஒருங்கிணைப் பாளர்களான உதவிப் பேராசிரியர்கள் பி.நவீதா, என்.ஆனந்த சிவ பாலா, எம். மாணிக்கச்செல்வி ஆகியோர்  ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆ.சிவா நன்றியுகூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top