Close
செப்டம்பர் 20, 2024 6:58 காலை

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் விஜயதசமி நாளில்  ஆர்வமுடன் சேர்ந்த  மழலையர்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் சேர்ந்த குழந்தைகள்

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் விஜயதசமி நாளில் ஆர்வமுடன் மழலையர்களை அழைத்து வந்து பெற்றோர்கள் சேர்ந்தனர்.

புதுக்கோட்டை கூடல் நகரில்உள்ள   ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் ஆரம்ப கல்வி கற்க ஆர்வமுடன் வந்த மழலையர்  அனைவரையும்       பள்ளியின்       தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ .கதிரேசன்   வரவேற்றார். முதல்வர் தேவிகீர்த்தனா,  ஆசிரியைகள், பெற்றோர்கள் இணைந்து  குத்து விளக்கேற்றி வைத்தனர்.

பின்னர்   புதிதாக பள்ளியில் சேர்ந்த மழலையர்களுக்கு பெற்றோர்களுடன் அமரவைத்தது   மழலையர்களின்  விரல் பிடித்து அரிசியில் ‘அ’ என்கிற எழுத்தையும் தனது பெயர்களையும்    எழுத வைத்தனர்.

பின்னர்.மழலையர்கள் வகுப்பறையில் அமர்ந்தும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் விளையாடி  மகிழ்ந்தனர்.    கல்வி கற்க     வருகை தந்த  குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் பலூன்கள் மற்றும் எழுதுபொருட்கள் ஆசிரியைகள் வழங்கினர்.

விஜயதசமி நிகழ்வில்  மருத்துவர்கள் பேராசிரியர்கள் .சமூக ஆர்வலர்கள் பேக்கரி மஹராஜ்  அருண் , சென்ட்ரல் ரோட்டரி வெங்கடாஜலம் மற்றும்  பெற்றோர்கள் ஆசிரியை திவ்யா, தேவி , ஜீவிதா  உள்ளிட்டவர்கள்   கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top