புதுக்கோட்டை கீ ழ 3 -ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் சங்காபிஷேக விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை கிழக்கு மூன்றாம் வீ தியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி கடைசிநாளை முன்னிட்டு சங்காபிஷேக விழா லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
கோவிலில் மூலவர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
பின்னர் மாலையில்உற்சவர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஸ்ரீ தேவி பூதேவி மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் சுவாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கவிண் பட்டாசாரியார் மற்றும் குணசீலன் உள்ளிட்ட ஆன்மிக அன்பர்கள் செய்திருந்தனர்.