மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் மிகப் பழமை வாய்ந்தது. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோவிலின் முன்பாக கொடி மரம் உள்ளது. இதற்கு மேல் மரக்கிளை ஒன்று இருந்து வந்தது. அதனை வெட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தனர்
ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்போது அந்த மரம் விழுந்து கொடிமரம் இரண்டாக உடைந்து விட்டது. பொதுவாக கொடிமரம் உடைந்தால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.
கோவில் கொடிமரம் உடைந்த பின்பு கோவில் நிர்வாக அதிகாரியிடம் ஆகம விதிப்படி கொடிமரம் பிரதிஷ்டை செய்ய வேண்டும், அதற்கு தற்காலிக பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது எதிர்க்கட்சிகள் தன்னை மிரட்டுவதாக கோவில் செயல் அலுவலர் ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது
எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆளுங்கட்சியினர் கூறிவிட்டதாகவும் ஆகையால் கொடிமரம் உடைந்து விழுந்த நிலையில் பிரதிஷ்டை செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்றும் கோவில் தரப்பில் கூறியதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கோவில் கொடிமரம் உடைந்த நிலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்கும் என்று இப்பகுதி பொதுமக்கள் பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்து திருக்கோவில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்து ஆகம விதிப்படி கொடிமரம் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.




