Close
செப்டம்பர் 20, 2024 6:45 காலை

கவிதைப் பக்கம்… நில் கவனி செல்… மருத்துவர் பெரியசாமி…

புதுக்கோட்டை

கவிதைப்பக்கம்

நில்,கவனி, செல்…

வாழ்க்கைப்பாதையில்
போதனைகள்
வண்ண விளக்குகளாக
நினைவுபடுத்தி
நெறிப்படுத்தவும்
நம்மை
நிம்மதிபடுத்தி
நிலைப்படுத்தவும்
நித்தம் ஒளிர்கிறது

வெற்றிப் பாதையில்
விபத்து இல்லாத
வேகம் தேவை
விவேகமும் தேவை
யோகம் என்பதெல்லாம்
மோகம் போன்ற போதை

தற்காத்து
தன் துணைகாத்து
பொருள் காத்து
புவி போற்ற வாழ்ந்தால்
புண்ணியமும் புகழும் சேரும்
புனிதமாய் வாழ்க்கை மாறும்

நிதானமும்
நீங்காத தானமும்
நேர்மறை ஞானமும்
நெறிகளாய் கொண்டால்
நீர் தரும் வானமும்
வையகமும்
போற்றும்

வாழ்க்கைப்பயணத்தில்….
அறம் ஓங்கி
அழுக்கான எண்ணங்கள்
அகம் நீங்கி
அழகான செயல்களை
தாங்கி
நில்,கவனி ,செல்
நிலைப்பாடு கொண்டால்
வாழும் நாள் இனிக்கும்
வாழ்க்கை மேலும் சிறக்கும்!

>>>மருத்துவர் மு.பெரியசாமி , புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top