Close
ஏப்ரல் 24, 2026 10:40 காலை

பெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா

ஈரோடு

பெருந்துறையில் நடைபெற்ற கலை விழாப்போட்டியில் பேசிய மாணவி

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் சார்பில் பெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.

விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் தனபாக்கியம் தலைமை வகித்து கலைத் திருவிழா குறித்து பேசினார்.

தலைமையாசிரியர்கள் ரவிச்சந்திரன், கலைமணி வரவேற்றனர். பெருந்துறை பேரூராட்சித் தலைவர் ராஜேந்திரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துணைத் தலைவர்கள் சண்முகம்.. சக்தி குமார்,பெருந்துறை கல்வி அறக்கட்டளையின் தலைவர் பல்லவி பரமசிவன் வாழ்த்துரை வழங்கினர்.வட்டார கல்விபெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா அலுவலர் முத்து மேகலை நன்றி கூறினார்.நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி பாக்கியம். பேரூராட்சி உறுப்பினர்கள் சித்திக்,

காமராஜ்,  மாவட்ட அறங்காவலர் குழு துணத் தலைவர் செல்வக்குமார், சீனாபுரம் செந்தில்குமார்,மாலதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆசிரிய பயிற்றுனர்கள் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top