Close
மே 20, 2024 10:09 மணி

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 31 வது வலு தூக்கும் போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வலு தூக்கும் போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 31 வது வலு தூக்கும் போட்டியில் சீனீயர் மற்றும் மாஸ்டர் என 97 வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் இந்த சங்கத்தின் நிறுவனர் முகமது அலி நினைவாக 31 வது மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி பெறும் 97 வீரர்கள் கலந்து கொண்டனர்.போட்டியானது சீனியர் பிரிவு மற்றும் மாஸ்டர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இதில் சீனியர் பிரிவில் 82 பேரும், இதேபோல் மாஸ்டர் பிரிவில் 15 பேர் என மொத்தம் 97 பங்கேற்று நடத்தப்பட்ட போட்டியில்
வலுவை தூக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

இந்தப் போட்டியில் இரண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top