Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

அமரர் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு நாள்.. பெருந்துறை-கோபியில் அதிமுகவினர் மலர் அஞ்சலி

ஈரோடு

எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள்

அதிமுகவின் நிறுவனர், முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆர் 35 -ஆவது ஆண்டு  நினைவு நாள் பெருந்துறை, கோபியில் அனுசரிக்கப்பட்டது.

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அமரர் எம்ஜிஆர்  உருவப்படத்திற்கு
பெருந்துறை கிழக்கு ஒன்றிய  செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் ஆகியோர் தலைமையில்
பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், குன்னத்தூர் நால்ரோடு, திங்களூர் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட இடங்களில் எம்ஜிஆர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை 10 மணி அளவில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் குன்னத்தூர் நால்ரோடு சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர் களும் கலந்து கொண்டனர்.

கோபியில்…

கோபி
கோபியில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு நகர செயலாளர் பிரினியோ கணேஷ் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

 

பெருந்துறையில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35 -ஆவது நினைவு நாள்  கோபி நகர அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. கோபியில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரினியோகணேஷ், முன்னாள் எம்பி சத்தியபாமா, யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top