Close
மே 20, 2024 5:49 மணி

சித்தன்னவாசல் கிராமத்தில் தேசிய விவசாய தினத்தன்று   வேளாண் பயிற்சி பெறும் புஷ்கரம் வேளாண் அறிவியல்கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டைமாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல்கிராமத்தில் வேளாண்பயிற்சி பெறும் புஷ்கரம் வேளான் அறிவியல் கல்லூரிமாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் கிராமத்தில் தேசிய விவசாய தினத்தன்று  வேளாண் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் 75 நாட்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறுவதற்கான கிராம வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் துவக்க விழா 23-12-2022 அன்று நடைபெற்றது.

விழாவிற்கு வேளாண்மை இயக்குனர் அ. பழனியப்பா தலைமை வகித்தார். சித்தன்னவாசல் ஊராட்சி    மன்ற தலைவர்  பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக   மத்திய கட்டுப்பாடு ஆய்வகம் குடுமியான்மலை, வேளாண் அலுவலர் அபிநாயா, சித்தன்னவாசல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  வாசுகி கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர்அபிநயா  பிரதமமந்திரியின் கெளரவநிதித் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும்  தவனண விவரங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் வேளாண் விரிவாக்கத் துறை பிரபுரத்தினம் மற்றும் உதவிபேராசிரியர். கிராம வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.ஆயிஷாசித்திக்கா மற்றும் கல்லூரி மாணவிகள் கீர்த்திகா, மேகா, ஜாய்பிரியங்கா, மோட்லிஜானி, நித்தியா, பவதாரணி,  ரஞ்சனி,  ஸ்ரீகலா, ஸ்டெல்லா, தமிழினிகா உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top