Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

தீண்டாமை கடைப்பிடித்தால்… ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை

தீண்டாமை... ஆட்சியர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை (DOUBLE GLASS) முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தகங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும் பின்வரும் கைபேசி எண்ணிற்கு 9443314417 புலனம் (WhatsApp) மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுவதாக  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top