Close
மே 20, 2024 4:35 மணி

மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அகரம் அஜித் தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தீர்மானங்கள்:- நீண்ட காலமாக அரூர் சட்டமன்றத் தொகுதி தனி தொகுதியாக இருந்து வருகிறது, இவற்றை சுழற்சி முறையில் பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு அருர் ரவுண்டானா பகுதியில் சிலை அமைக்க வேண்டும். கே. ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து நீர் ஏற்றும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். போன்ற தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் மணி, வெற்றி செல்வன், கார்த்தி, பிரசாந்த், வழக்கறிஞர் சிப்பிராஜ் போன்றோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top