Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

நேரு யுவ கேந்திரா  சார்பில் இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி

புதுக்கோட்டை

நேருயுவகேந்திரா சார்பில் ஐஐபிஎச்எஸ் கல்லூரியில் நடைபெற்ற இளையோருக்கான பயிற்சி முகாம்

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா  இளையோருக்கான தலைமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோருக்கான தலைமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான மூன்று நாள் பயிற்சி முகாமின் துவக்க விழா சத்தியமங்கலம் மேலூரில் அமைந்துள்ள ஐஐபிஎச்எஸ் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் பயிற்சி உபகரணங்களை வழங்கி தலைமை உரையாற்றினார். நேரு யுவகேந்திராவின் திட்ட உதவி அலுவலர் ரா.நமச்சிவாயம் திட்ட நோக்கம் குறித்து பேசியதாவது: நேரு யுவ கேந்திரா என்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கிராமப்புற இளைஞர்களுக்கு வழிவகைகளை வழங்குதல், அவர்களின் ஆளுமை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.

சென்ற 1972 -ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட இளைஞர் நல மேம்பாட்டு அமைப்பாகும். ராஜீவ்காந்தி இதனை 1987-ல் நேரு யுவ கேந்திரா சங்கதன் என இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக மாற்றினார். இது உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான இளைஞர் மேம்பாட்டு அமைப்பாகும். இது தன்னார்வ, சுய உதவி மற்றும் சமூக பங்கேற்பு கொள்கையின் அடிப்படையில் இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைக்கிறது.

நேரு யுவ கேந்திரா சங்கதன் இளைஞர் விவகார அமைச்சகத்தின் பல்வேறு இளைஞர் நலத் திட்டங்கள் மற்றும் பிற அமைச் சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்புத் திட்டங்களையும் இளைஞர் மேம்பாட்டின் பல்வேறு வகைகளில் பணியாற்றி வருகிறது.

நல்ல குடியுரிமை, சிந்தனை மற்றும் மதச்சார்பற்ற வழிகளில் நடந்துகொள்வது, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் உற்பத்தி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க உதவுவதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை
முகாமில் பேசிய நேருயுவகேந்திரா உதவி திட்ட அலுவலர் நமச்சிவாயம்

மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கிராமப்புற இளைஞர்களுக்கு வழிவகைகளை வழங்குதல், அவர்களின் ஆளுமை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது என்றார் நமச்சிவாயம்.

பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்  சூரியபிரபு விழா துவக்க உரையாற்றினார். சத்தியமங்கலம்  மேலூர் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி தாளாளர்  இ.சாந்தி, சாலை பாதுகாப்பு சங்க தலைவர் க.மோகன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 40 இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புத்தாஸ் வீரக் கலைகள் கழக நிறுவனர் சேதுகார்த்திகேயன் வரவேற்றார். நிறைவாக மேலூர் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி விரிவுரையாளர்  முத்துக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top