Close
செப்டம்பர் 20, 2024 5:50 காலை

புதுக்கோட்டை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு

புதுக்கோட்டை மேலராஜவீதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் மேலராஜவீதியுள்ள நாகமுத்துப்பிள்ளை பஜனை மடத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா தை பூசத்தினத்தன்று சிறப்பாக நடைபெற்றது.

கோயிலில் விமானங்கள் கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது திருப்பணிகள் செய்யப்பட்டு இதற்கான கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.மேலும் நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.அங்கு வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல்கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

புதுக்கோட்டை
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

2 -ஆம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி வேதபாராயணம், திருமுறை பாராயணம், 3 -ஆம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா தைபூசத்தினத்தன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மேல் 4-ஆம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

நாடி சந்தானம், மகா தீபாராதனை, கலசங்கள் ஆலயம் சுற்றி வருதல் போன்ற நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து ஆலய விமானங்கள் மற்றும் மூலவர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள் கோபுரத்தின் அருகில் கருடர் பகவான் பறந்ததை பார்த்த பக்தர்கள் முருக பெருமானுக்கு அரோகரா என்ற பலத்த கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர் .

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமிக்கு அபிஷேகம், தசதானம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சுப்பிரமணிய சுவாமி திருப்பணி குழுவினர் மற்றும நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top