Close
மே 25, 2026 7:55 மணி

முல்லை நகர் செல்வகணபதி கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் முல்லைநகர் செல்வகணபதி கோயில் கும்பாபிசேக விழாவில், சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில், முல்லை நகர், அன்பு நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்கு பாத்தியப்பட்ட செல்வகணபதி, துர்க்கை அம்மன், குரு தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், நவநாயகர்கள் மற்றும் அரச மரத்து விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன.

இந்த கோயில்கள் கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி திரளான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். 24ம் தேதி ஞாயிறு காலை 7 மணிக்கு மகாலட்சுமி ஹோமம் மற்றும் கோபுர கலசம் வைத்தல் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இன்று 25ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு 2ஆம் கால யாசாலை மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, செல்வகணபதி மற்றும் பரிவார ஆலயங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து செல்வகணபதி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, பால முருகன், நவநாயகர்கள், அரசமரத்து மங்கள விநாயகர் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம், தச தரிசனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top