Close
மே 12, 2024 7:22 காலை

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட வாய்ப்பு : கலெக்டர்..!

முதியோர்களுக்கு தபாலில் ஓட்டுப்போடும் வாய்ப்பு (கோப்பு படம்)

நாமக்கல்:
85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியோ தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகள், வீட்டில் இருந்தே தாபல் ஓட்டு மூலம் ஓட்டு போடும் வசதியை, இந்திய தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இந்த வசதியை பெறுவதற்காக, ‘12டி’ என்ற படிவத்தில், தங்களது விருப்பத்தை மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தெரிவிக்க வேண்டும்.

12டி படிவத்தை தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க உள்ளனர். வீட்டில் இருந்து ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்தவர்கள் வீட்டிற்கு, இரண்டு ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஒரு வீடியோகிராபர் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கியப் ஓட்டுப்பதிவு குழு சென்று, வாக்காளரை தபால் ஓட்டுச்சீட்டில் ஓட்டுப்போட செய்யும்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா.

இந்த ஓட்டுப்பதிவின் ரகசியம் காக்கப்படும். ஓட்டுப்பதிவு குழு வருகை தரும் தேதி, நேரம் குறித்து படிவம் ‘12டி’ விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு, எஸ்எம்எஸ் செய்தி, தபால் அல்லது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் முன்னரே தெரிவிக்கப்படும்.

முதல் வருகையின் போது கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்காளர் இல்லை என்றால், ஓட்டு சேகரிக்கும் குழுவானது, அவர்களின் இரண்டாவது வருகையின் தேதி மற்றும் நேரத்தை அறிவிப்பார்கள். இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மேற்கொண்டு மறுவருகையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படமாட்டாது.

தபால் ஓட்டு மூலம் வீட்டில் ஓட்டுபோடும் வசதியை தேர்வு செய்பவர்கள், ஓட்டுப்பதிவு நாளில் நேரடியாக ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்போட முடியாது. மேலும், ஓட்டுப்பதிவு குழுவின் இரண்டாவது வருகையின் போதும் வீட்டில் இருக்க தவறிய வாக்காளர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டு மற்றும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் ஆகிய இரண்டிலும் ஓட்டுப்போடும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான இடங்களில் உதவ சாய்வுதளம், சக்கர நாற்காலிகள், காத்திருப்புப் பகுதி, கழிப்பறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top