Close
செப்டம்பர் 20, 2024 7:28 காலை

ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆலயத்தில் பக்தி நூல்கள் விற்பனை மையம் திறப்பு

புதுக்கோட்டை

புதுகை பிரஹதாம்பாள் கோயிலில் பக்தி நூல்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தி நூல்கள் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோகரணம் அருள்மிகு ஸ்ரீ பிரஹதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர்  ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தி நூல்கள் விற்பனை மையத்தினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

இந்த நூலக விற்பனை மையத்தில் அகத்தியர், அர்த்த பஞ்சகம், குமரகுருபர அடிகள், திருவாசகம், வழிபாட்டு பாடல்கள், உள்ளிட்ட அனைத்து விதமான பக்தி நூல்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ராஜகோபால தொண்டைமான், திருச்சி முன்னாள் மேயர் சாருபால தொண்டைமான், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், அறங்காவல்குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top