Close
செப்டம்பர் 20, 2024 6:20 காலை

காரியாபட்டியில் பள்ளி ஆண்டு விழா

விருதுநகர்

காரியாபட்டி காரியாபட்டி ஸ்ரீ நேஷனல் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவிக்கு பரிசளித்த பேராசிரியர் கு,. ஞானசம்பந்தம்

விருதுநகர் அருகே காரியாபட்டி ஸ்ரீ சபரி நேஷனல் பள்ளி 7 -ஆவது ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஸ்ரீ நேஷனல் பள்ளியில் நடைபெற்ற  7 -ஆவது ஆண்டு விழாவுக்கு மதுரை வழக்கறிஞர் ஜெயபிரகாஷ்  தலைமை வகித்தார். பள்ளியின் சேர்மன் தேவராஜ் முன்னிலை வகித்தார் .முதல்வர் த.கௌரி வரவேற்றார்.

பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று,  இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் கடமைகள் பற்றி பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன்  பேசினார்.

நிகழ்ச்சியில், மாணவர்களின் பல்வேறுவிதமான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கும், பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பரிசுகள் வழங்கினார்.

இவ்விழாவில், எஸ்.பிஎம் டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி,  பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர் மணிகண்டன், செயலாளர் சபரிநாதன், பள்ளி இயக்குனர் பாலமுருகன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top