Close
செப்டம்பர் 20, 2024 7:03 காலை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றா ண்டு விழாவையொட்டி திமுகவில் ஒரு கோடி புதிய உறுப் பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி ‘உடன் பிறப்புகளாய் இணைவோம்’ என்ற திட்டத்தை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, புதிய உறுப்பினர் சேர்த்தல் முகாம் ஆத்தூர் தொகுதியில் நடைபெற்றது இதில் மாநில விவசாய அணி துணைச் செயலாளரும் திண்டுக்கல்  மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றதொகுதி பார்வையாளருமான கள்ளிப்பட்டி மணி மற்றும் மாவட்ட அவை தலைவர் காமாட்சி மற்றும் ஒன்றிய கழக செயலாளர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top