Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவுத்துறை ஊழியர்கள்

ஊழியர் விரோதப் போக்கை தொடர்ந்து  கடைப்பிடிப்பதுடன்,  ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகிவரும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளராக பணியாற்றுபவர் மு.உமாதேவி. இவர் தொடர்ந்து தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களை தரக்குறைவாகப் பேசி ஊழியர் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இவர்மீது 6 ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அரசுக்கும் கூட்டுறவுத் துறைக்கும் தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்திவரும் துணைப் பதிவாளர் உமாதேவி மீது  உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.கே.ஏ.மனோகரன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் டி.வினிதா முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பா.ஆனந்தம், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு.முத்தையா, பொருளாளர் கி.ஜெயபாலன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் பூங்காவனம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top