Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

தமுஎகச சார்பில் தற்காப்பு கலைப் பயிற்சி…

புதுக்கோட்டை

தமுஎகச சார்பில் நடைபெற்ற கோடைகால சிறப்பு தற்காப்புக்கலை பயிற்சி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பதுக்கோட்டை மரபுக்கலை கிளையின் சார்பில் புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் மாணவர்க ளுக்கான கோடைகால தற்காப்புக் கலை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மரபுக்கலை கிளையின் சார்பில் ஐந்து நாள் தற்காப்புக்கலை பயிற்சி முகாம் புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் கடந்த ஞாயிறு முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்றது. இதில் சிலம்பம், களரி உள்ளிட்ட பல்வேறு கலைகள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை
தற்காப்புக்கலை பயிற்சி பெறும் மாணவர்கள்

வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமின் நிறைவு விழாவிற்கு கிளைத் தலைவர் புதுகைப் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன், மக்கள் ஒற்றுமை மேடைப் பொறுப்பாளர் எம்.ஏ.ரகுமான், பேராசிரியர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக கிளை துணைச் செயலாளர் கார்த்திக் வரவேற்றார். பயிற்சியாளர் ஆதித்தியன் நன்றி கூறினார். பயிற்சி முகாமில் 50 மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top