Close
மே 20, 2024 4:35 மணி

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மணிவண்ணன் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட மணிவண்ணன் ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்றார்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சாமி. சத்தியமூர்த்தி,  தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வுமையத்திற்கு நிர்வாக அலுவலராகவும் , சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த எஸ்.மணிவண்ணன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராகவும் பணியிட மாறுதல் செய்யப்படனர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் மற்றும் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலகராக மாறுதல் பெற்றுள்ள சாமி.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமுவை  நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

நிகழ்வின் போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி,குருமாரிமுத்து ,இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் அவர்களையும், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலராக மாறுதலாக மாறுதல் பெற்றுள்ள சாமி.சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ,தலைமையாசிரியர்கள் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top