Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

புதுக்கோட்டையில் மாதர் சங்க சிறப்புப் பேரவைக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கத்தின் மாவட்ட சிறப்புப் பேரவைக்கூட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டை ஆர்.கே.நினைவரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரவைக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். எதிர்கால திட்டமும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, உறுப்பினர் பதிவும் சங்க விரிவாக்கமும் என்ற தலைப்பில் மாவட்ட துணைத்தலைவர் டி..சலோமி ஆகியோர் உரையாற்றினார்.

புதுக்கோட்டை
கூட்டத்தில் பங்கேற்ற மாதர் சங்கத்தினர்

முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கவிதா வரவேற்க, மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகைராணி நன்றி கூறினார். பேரவையில் நிர்வாகிகள் கே.சாந்தி, எம்.மகாலெட்சுமி, ஆர்.முத்துமாரி, பி.சோபனா, இந்திராணி, ஆர்.மதியரசி, எம்.நித்யா, எஸ்.நாகூரம்மாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top