Close
செப்டம்பர் 20, 2024 8:35 காலை

ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் ஊழியர் விரோத பணியிடை நீக்கத்தை கண்டித்தும், உடனடியாக பணியிடை நீக்கத்தை ரத்துசெய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆர்.சரஸ்வதி கடந்த 15.05.2023 அன்று புதுக்கோட்டை நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கரு.மணிவண்ணன், சுகாதார அலுவலர் பொறுப்பு நா.கணேசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். எந்தவிதமான புகாரும் இல்லாத நிலையில் மேற்படி இருவரையும்  காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, யாருடையோ தூண்டுதலின் பேரில் பணிநீக்கம் செய்துள்ளதாகவும், தற்காலிக பணி நீக்கத்தை உடனடியாக ரத்துசெய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் கரு.மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மு.தாமோதரன், பொருளாளர் இரா.சுவாமிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் க.முகமதலிஜின்னா, தோழமைச் சங்க நிர்வாகிகள் கே.குமரேசன், ஆ.மலர்விழி, எஸ்.குணசேகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top