Close
ஆகஸ்ட் 6, 2026 8:22 மணி

புதிய தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் விஜய்: ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நல சங்கம் வாழ்த்து

ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கத்தின் மாநில அமைப்பாளர் பழனிவேலன்

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மாநிலத்தின் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, விரைவில் ஆட்சியை அமைக்க உள்ளது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோசப் விஜய்க்கு, ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கத்தின் மாநில அமைப்பாளர் பழனிவேலன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். குறுகிய காலத்தில் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள அவருக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தவெக தலைவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டிருந்த அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

  • தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • அரசுப் பணியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தனி வாரியம் அமைக்க வேண்டும்.
  • தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளைத் தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்.
  • பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதே இச்சங்கத்தின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top