Close
செப்டம்பர் 20, 2024 5:39 காலை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: இலக்கிய போட்டிகளில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 6 ஆவது புத்தக திருவிழா

ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி ஒன்றிய அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து  நடத்தும் ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.

இதனையொட்டி மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர் களுக்கான  ஒன்றிய அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை
கீரனூரில் நடைபெற்ற கலை இலக்கியப்போட்டிகள்

6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும், 9,10 வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும், 11,12 வகுப்புகளுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. கவிதை, பேச்சு, ஓவியம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திருமயத்தில் நடைபெற்ற கலை, இலக்கியப் போட்டிகள்

இதில் முதல் இடத்தைப்   பெற்றவர்கள் வருகின்ற (ஜூலை 17) திங்கள்கிழமை  மாவட்ட ஆளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பர். இவர்களுக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழா மேடையில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top