Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

புத்தகத் திருவிழாவில் கவிதைநூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கவிஞர் சாமி கிரீஷின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கவிஞர் சாமி கிரீஷின் கவிதை நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை 6-ஆவது புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஜி.முருகராஜ் தலைமை வகித்தார். கவிஞர் நந்தலாலா, வழக்கறிஞர் த.இராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ, எழுத்தாளர் அண்டனூர் சுரா, பழ.குமரேசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவில் கவிஞர் சாமி கிரீஷ் எழுதிய ‘சருகு துளிர்காலம்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. நூலை கவிஞர் நந்நதலாலா வெளியிட்டார். முதல் பிரதியை கவிஞர் தங்கம்மூர்த்தி, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் அ.மணவாளன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக தமுஎகச மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன் வரவேற்றார், ஆ.கமலம் நன்றி கூறினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top