Close
ஏப்ரல் 24, 2026 12:56 காலை

வாடிப்பட்டியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம் மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல் லூர், பாலமேடு பேரூராட்சிகள், சமயநல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதிகளுடன் 244 வாக்குச் சாவடிகள் உள்ளது.
அந்த வாக்குச்சாவடிகளில்வரும் 16,17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான முகாம் நடைபெற உள்ளது.
அதில், பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
இந்த முகாமிற்கு, வட்டாட்சியர் ராமச்சந் திரன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை வட்டாட்சிய் அல்காபுதீன் வாக்காளர்
சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது குறித்து பயிற்ச்சியளித்தார்.
இதில், 244 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வருவாய் ஆய்வாளர் ராமர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top