Close
ஏப்ரல் 23, 2026 9:54 மணி

மதுரை மாநகராட்சியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் நாளை ஆண்டு தோறும் சமத்துவ நாள் ஆக கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை துணை ஆணையாளர் இராஜாராம் தலைமையில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,  சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,  நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சகமனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று துணை ஆணையாளர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல், அந்தந்த மண்டலங்களில் உதவி ஆணையாளர்கள் முன்னிலையில்  அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் (பணி) அருணாச்சலம், நகர்நல அலுவலர் மரு.அர்விந்த் ஜோதி, உதவி ஆணையாளர் (கணக்கு) முகம்மது அலி ஜின்னா, கணக்கு அலுவலர் (பொது) பாலாஜி,  வருவாய் அலுவலர்  பார்த்தசாரதி,  கண்காணிப்பாளர் ராஜ்குமார்,  மாநகராட்சி அலுவலர்கள்,  பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top