Close
ஏப்ரல் 23, 2026 9:47 மணி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி தொடர்பு அலுவலர்களுடன் கலெக்டர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பு அலுவலர்களுடன், கலெக்டர் துர்காமூர்த்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளின் தொடர்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. தேர்தல் ஆணைய பொதுப்பார்வையாளர் லாலாசாஹிப் யாதவ், முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி, வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், தன்னார்வலர்கள், நடமாடும் சேகரிப்பு தன்னார்வலர்கள், அடிப்படை வசதிகள், இருக்கைகள், சாமியானா பந்தல், குடிநீர், ஓட்டுச்சாவடி அருகிலுள்ள சுகாதார மைய வரைபடம், மின் இணைப்புப் புள்ளிகள், வண்ணக் குறியீடுகள், வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம், இரண்டாம் கட்டப் பயிற்சி, உதவி மைய ஏற்பாடுகள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான செல்போன் அப்ளிகேஷன் ஆகியவை குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது

தேசிய தகவலியல் மைய அலுவலர், பயிற்சி ஒருங்கிணைப்பு அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், அனைத்து பேரூராட்சிசெயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், நாமக்கல் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து தொடர்பு அலுவலர்களையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்புகொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்தி கிடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் டிஆர்ஓ கண்ணன், மாவட்ட ஆட்சியரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top