Close
செப்டம்பர் 20, 2024 3:34 காலை

மக்கள் குறை தீர்க்கும் முகாம்… ஆட்சியரிடம் 331 பேர் கோரிக்கை மனு அளிப்பு

புதுக்கோட்டை

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள்  முகாமில்  மாவட்ட ஆட்சியரிடம் 331 பேர் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, தலைமையில்  (21.08.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  அளித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர்,  கோரிக்கை மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top