Close
செப்டம்பர் 20, 2024 6:57 காலை

ஒன்றிய அரசைக்கண்டித்து செப் 7 ல் நடைபெறும் மறியல் போராட்டத்தில் 5 ஆயிரம் பங்கேற்க முடிவு

புதுக்கோட்டை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 7 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், என்.பொன்னி, சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலையும், அரசு நிர்ணயித்த கூலியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பங்கேற்கச் செய்வது எனவும் மாவட்ட குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top