Close
செப்டம்பர் 20, 2024 5:45 காலை

விடுதி மாணவர்களுக்கு உணவுப் படியை உயர்த்தி வழங்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்க நகரக்குழு கூட்டம்

விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியினை உயர்த்தி வழங்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரப் பேரவைக் கூட்டம் நகரத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி தலைமையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரவையைத் தொடங்கி வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா உரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், துணைத் தலைவர் இரா.வசந்தகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிக்கையை முன்வைத்து செயலாளர் பி.கார்த்திக்கேயன் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெ.கார்த்திகாதேவி நிறைவுரையாற்றினார்.

புதுக்கோட்டை
கூட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்கத்தினர்

அனைத்து மகளிர் கல்லூரி மற்றும் விடுதிகளில் தூய்மையான மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். விடுதி மாணவர்களின் உணவுப் படியினை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி நிலையங்களில் உள் புகார் பெட்டி (ஐசிசி) அமைக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் இருந்து வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக சோ.ஹேமதர்ஷினி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top