Close
அக்டோபர் 5, 2024 10:31 மணி

மக்களவைத் தேர்தல்… அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை

ஈரோடு

எம்பி தேர்தல் பூத் கமிட்டி குறித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக துடுப்பதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக  இந்திய மக்களவைத் தேர்தல்( 2024) பூத் கமிட்டி  அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பெருந்துறை அருகே துடுப்பதியில்    நடைபெற்றது.

கூட்டத்தில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளரும், முன்னாள் சி.எம்.எஸ் தலைவருமான அருள் ஜோதி கே.செல்வராஜ் பங்கேற்று  ஆலோசனைகளை வழங்கி பூத் கமிட்டி புத்தகங்களை  நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக துணை செயலாளர் டி.எஸ். அன்பரசு, மாவட்ட பிரதிநிதி ஜோதி (எ) ரங்கசாமி, கார்த்தி, பிரகாஷ்(எ) மோகன்ராஜ், சந்திரன்,  சிவன் துரை, போட்டோ மோகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்துச்சாமி, குருசாமி, நடராஜ், மனோகரன், அண்ணாதுரை, பழனிசாமி, கோவிந்தசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சுப்பிரமணி, ரவி, மஞ்சு, செல்வகுமார், பிரகாஷ், பாலகரை ராஜேந்திரன், சிட்டு, பழனிசாமி, ரகுபதி, சண்முகம், தங்கராசு, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top