Close
அக்டோபர் 6, 2024 1:33 மணி

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள  கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த பஸ் நிலைய வளாகத்தில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் கடந்த  அதிமுக ஆட்சி காலத்தில் சுமார் 1.65 கோடி செலவில்  புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள  கட்டிடங்கள் பல இடங்களில் மேற்கூரையின் கான்கிரீட் தளம்  பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. கான்கிரீட் தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ் நிலையத்தின் கட்டிடத்தின் உறுதித்தன்மையை  வல்லுனர்கள் குழு மூலம் நகராட்சி நிர்வாகம்   ஆய்வு செய்தது.  அப்போது கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென பரிந்துரை செய்தனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிற நிலையில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் கடை வியாபாரிகள், தொழிலாளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் சேதமடைந்த கட்டிடங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கட்டிடங்களின் என அருகே அறிவிப்பு பதாகை பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் வைக்கப்பட்டன. மேலும் தடுப்பு திரையும் போட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் தற்காலிகமாக  பேருந்து  நிலையத்தை மாற்றவும், கடைகள் அமைத்து கொடுக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மழை காலம் தொடங்கிய நிலையில் கட்டிடத்தின் ஸ்திரதன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றும், மாவட்டத்தின் தலைநகரமான புதுக்கோட்டையின் மையப்பகுதியில் அமைய உள்ள புதிய  பேருந்து நிலைய கட்டிடத்தை கூடுதல் அடிப்படை வசதிகளுடன் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சேதமடைந்துள்ள கட்டிடங்களை பொக்லைன் மூலம் அகற்றும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இது குறித்து,  பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் கட்டிடங்களில் சிமெண்டு பூச்சுகள் பல இடங்களில் பெயர்ந்து யார் தலையில் விழும் என்ற ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே புதிய கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

கடைகளின் மேற்கூரைகளில் பல இடங்கள் சேதமடைந்துள் ளன. இதனை இடித்து விட்டு புதிய கடைகளை விரைவில் கட்ட நடவடிக்கை எசுக்க  வேண்டும். இந்த கட்டுமான பணியின் போது வியாபாரிகள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம்  செய்ய வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top