Close
அக்டோபர் 5, 2024 10:32 மணி

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சிபிஎம் கட்சி சார்பில் நடைபெற்ற இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இரண்டுநாள் இசைப் பாடல்கள் தயாரிப்பு முகாம் கடந்த செப்.27, 28 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விதோரக் கொள்கைகளை அம்பலப்படுத்தி, வெகுமக்களைற ஈர்க்கும் வகையில் பிரசாரப் பாடல்களை உருவாக்குவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்தது.

அதனையொட்டி அக்.27, 28 தேதிகளில் புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில் இரண்டுநாள் இசைப்பாடல்கள் தயாரிப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முகாமின் நோக்கத்தை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசினார். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வாழ்த்திப் பேசினார்.

இம்முகாமில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, நாடகவிய லாளர் பிரளயன், வீதி நாடகக் கலைஞர் பூபாளம் பிரகதீஸ்வரன், கவிஞர்கள்  நா.முத்துநிலவன், வெற்றிநிலவன், நவகவி, இரா.தனிக்கொடி, வெண்புறா, இசைப் பாடகர்கள் கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, உமா உள்ளிட்ட 25 பேர்  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top