Close
செப்டம்பர் 20, 2024 6:46 காலை

மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக்கொலை

சென்னை

கொலை

சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவ ரின் கணவரான சுமன் (47) என்பவர் திங்கள்கிழமை  நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சென்னை மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வைதேகி. இவரது கணவர் சுமன். அதிமுகவை சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று விச்சூர் மேட்டு தெருவில் சுமன் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நகர்கள் சுமனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயமடைந்த சுமனை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து போய் விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மணலி புதுநகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இச்சம்பவம்  நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top