Close
அக்டோபர் 5, 2024 7:14 மணி

புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் மழலையர் சேர்க்கை

புதுக்கோட்டை

புதுகை யுரோ கிட்ஸ் பள்ளியில் நடந்த மழலையர் சேர்க்கை

புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் ஆர்வமுடன் மழலையர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து  சேர்ந்தனர்.

விஜயதசமி நாளில் ஆரம்பக் கல்வி கற்க ஆர்வமுடன் வந்த மழலையர் அனைவரையும் பள்ளியின் தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ .கதிரேசன் வரவேற்றார்.

முதல்வர், ஆசிரியைகள், பெற்றோர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி வைத்தனர். பின்னர் புதிதாக பள்ளியில் சேர்ந்த மழலையர்களுக்கு பெற்றோர்களுடன் அமரவைத்தது மழலையர்களின் விரல் பிடித்து அரிசியில் ‘அ’ என்கிற எழுத்தையும் தனது பெயர்களையும் எழுத வைத்தனர்.

புதுக்கோட்டை
பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை

பின்னர்.மழலையர்கள் வகுப்பறையில் அமர்ந்தும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் விளையாடி மகிழ்ந்தனர். கல்வி கற்க வருகை தந்த குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் பலூன்கள் மற்றும் எழுதுபொருட்களை ஆசிரியைகள் வழங்கினர்.

தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உள்ளிட்டோர்  அழைத்து வந்து சேர்ந்தனர். நிகழ்வில் மருத்துவர்கள் பேராசிரியர்கள் .சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியைகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top