Close
அக்டோபர் 5, 2024 10:02 மணி

பல்லடம் நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி நிருபர் மீது தாக்குதல்: பொன்னமராவதி, கந்தர்வகோட்டை தாலுகாக்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 தமிழ் சேனலில் தாலுகா செய்தியாளராக பணியாற்றிய நேசபிரபு என்பவரை கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் உயிர் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத்தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள  அனைத்து மாவட்ட பத்திரிகை யாளர் சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொன்னமராவதி, கந்தர்வகோட்டை ஆகிய தாலுகாக்களில்  பத்திரிகையாளர்கள் வியாழக்கிழமை மாலையில்   கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்லடம்  தொலைக்காட்சி நிருபர் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top