Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கல்

புதுக்கோட்டை

அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மரக்கன்று வழங்கும் நிகழ்வு

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சி.எஸ்.கே. குளோபல் பவுன்டேஷன் சார்பாக  500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு, பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுகை வருவாய் கோட்டாட்சியர் மா.செல்வி பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, வாழ்த்திப் பேசினார். மரக்கன்றுகளை வழங்கிய சி.எஸ்.கே. குளோபல் பவுன்டேஷன் நிறுவனர் சித்திரை செல்வக்குமார் மரங்களின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

நிகழ்வில் மருத்துவர் ச.ராம்தாஸ், இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் மு.சத்தியராம் ராமுக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர்  இன்பராஜ்  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top