Close
அக்டோபர் 5, 2024 8:12 மணி

மாச்சம்பட்டில் ஏசிஎஸ் குழுமத்தின் இலவச மருத்துவ முகாம்

பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ஏசிஎஸ் குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஏசிஎஸ் கல்விக் குழுமம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்ட தலைவர் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.

இலவச மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை, இலவச மருத்துவ ஆலோசனைகள், இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சுமாா் 850-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

மருத்துவ முகாமில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமில், பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் வி.கே.பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் விஜயன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் தீபக் ரெட்டி, இளைஞரணி பொறுப்பாளர் சஞ்சய் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை ஏசிஎஸ் மாவட்ட பேரவை தலைவர் ஆர்.பரத் ரெட்டி, பேர்ணாம்பட்டு ஒன்றிய மகளிரணி செயலாளர் பி.சுகன்யா ரெட்டி ஆகியோா் செய்திருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top