Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு

மதுரை, திருவேடகம் விவேகானந்த  கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழுவின்  சார்பாக இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர்  மேம்பாட்டு கருத்தரங்கு  நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர்  முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக விவேகானந்தர் கல்லூரியில் முன்னாள் துணை முதல்வர் முனைவர் இளங்கோ “இந்திய அறிவு அமைப்பு (IKS)” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சரவணக்குமார் தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top