Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

ஆவணி அவிட்டம்:  புதிய பூணூல் அணிந்து கொண்ட பிராமண சமுதாய மக்கள்

சிவகங்கை

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற்ற பூணூல் மாற்றும் வைபவத்தில் பங்கேற்ற பிராமணர்கள்

சிவகங்கை:  ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில் வசித்து வரும் பிராமண சமுதாய மக்கள் பங்கேற்ற பூணூல் மாற்றும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆவணி மாதத்தில் பௌர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில்தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

அதனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பூணூல் மாற்றும் நிகழ்வு  முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பிராமண சமுதாயத்தினர் அதிகாலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள். இதை ஹயக்ரீவ ஜயந்தி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

இந்த ஆண்டுக்கான ஆவணி அவிட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) நடைபெற்றது. திகாலை 3.07 மணி தொடங்கி, மறுநாள் (ஆகஸ்டு 20) அதிகாலை 1.09 வரை பௌர்ணமி திதி உள்ளது. அதே சமயம், திங்கள்கிழமை காலை 9.09 மணிக்கு பிறகுதான் அவிட்ட நட்சத்திரம் தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை காலை 7.50 வரை அவிட்ட நட்சத்திரம் உள்ளது. இருப்பினும் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யும் காரியங்களுக்கு நாள், நட்சத்திரம், கிழமை என எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பார்கள். அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த வேளையில் பூணூல் மாற்றுவது நல்லது என சொல்லப்படுகிறது.

இதையடுத்து, பகல் 12 முதல் 1 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்திலும் பூணூல் மாற்றிக் கொள்ளலாம். ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில் உள்ள  கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top